அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள், ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.அந்த வகையில் சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ,பாப்பி நாயக்கன்பட்டி பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஏழை மக்களுக்காவே 2000 மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர். இது நீங்கள் கொடுத்த பதவி.முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல. உழைப்பால் உயர்வடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன். நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. சென்னை அப்போலோவில் கிடைக்கும் அதே சிகிச்சை, நாமக்கல் மக்களுக்கும் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…