அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்க்கொண்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்று கூறினார் .இது பலத்த சர்ச்சையை கிளப்பியதோடு பல எதிர்ப்புகளும் ஆதரவும் கிளம்பியது.
இதனிடையே நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பேசிவிட்டு கீழிறங்கும் போது காலணி வீசப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பாஜகாவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் ,இதை நான் ஏற்கனவே மெரினாவில் பேசியுள்ளேன்.இது உருவான சர்ச்சையில்லை உருவாக்கப்பட்ட சர்ச்சை,பிரதமர் மோடிக்கு பதில் கூறவேண்டியதில்லை .சரித்திரம் பதில் சொல்லும்.நான் கைதுக்கு பயப்படவில்லை, கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை அது என்னுடைய அறிவுரை என்று தெரிவித்தார்.
மேலும் நாதுராம் கோட்ஸே குறித்த கருத்து தொடர்பாக சூலூரில் இன்று கமல் பிரச்சாரம் மேற்க்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது .இதற்கு பதிலளித்த கமல் பரப்புரை மேற்க்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதில் அரசியல் உள்ளது. அப்படி பதற்றமான சூழல் இருந்தால் சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…