நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் – குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூறிய முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றதாக கூறியுள்ளார். 

இதையயடுத்து, மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஸ்டாலின் குற்றசாட்டுபடி, தமிழகத்தில் 9 லட்சத்தி 14 ஆயிரம் பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில், 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், முதல்வர் அவர்கள் 1.76 லட்சம் தான் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 11.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்தி 45 ஆயிரத்து 700 பிசிஆர் கருவிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 லட்சத்து 51 ஆயிரத்து 800 கருவிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நன்கொடையாக 53,516 பிசிஆர் கருவிகள் வந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50,000 கருவிகள் வந்துள்ளது. இதுவரை மொத்தம் 12 லட்சத்து 55 ஆயிரத்து 800 பிசிஆர் கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,95,416 கருவிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. தற்போது 5,3,339 கருவிகள் கையிருப்பில் உள்ளது என்றும் ஏற்கனவே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 77 இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

5 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

7 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

8 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

9 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

10 hours ago