நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் – குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூறிய முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றதாக கூறியுள்ளார். 

இதையயடுத்து, மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஸ்டாலின் குற்றசாட்டுபடி, தமிழகத்தில் 9 லட்சத்தி 14 ஆயிரம் பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில், 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், முதல்வர் அவர்கள் 1.76 லட்சம் தான் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 11.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்தி 45 ஆயிரத்து 700 பிசிஆர் கருவிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 லட்சத்து 51 ஆயிரத்து 800 கருவிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நன்கொடையாக 53,516 பிசிஆர் கருவிகள் வந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50,000 கருவிகள் வந்துள்ளது. இதுவரை மொத்தம் 12 லட்சத்து 55 ஆயிரத்து 800 பிசிஆர் கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,95,416 கருவிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. தற்போது 5,3,339 கருவிகள் கையிருப்பில் உள்ளது என்றும் ஏற்கனவே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 77 இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு!

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு!

கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…

6 minutes ago

காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O : “அனைத்து பள்ளிகளிலும் முக்கிய அறிவிப்பு” மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…

1 hour ago

புதுவித சாதனை படைத்த ஷிவம் துபே… இந்த ரெக்கார்டில் உலகிலே இவர் தான் முதல் கிரிக்கெட் வீரர்.!

சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…

1 hour ago

விராட் கோலி ‘க்ளீன்’ போல்டு! “பவுலர் ஒரு ரத்தினம்” புகழ்ந்து தள்ளிய அஷ்வின்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…

2 hours ago

திருப்பரங்குன்றம் விவகாரம் : “இந்து மத உணர்வுகளை திமுக அரசு புறக்கணிக்கிறது” ஆவேசமான வானதி!

கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…

3 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…

3 hours ago