காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியைக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மக்களை நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல், இந்த மண்ணில் மலரவேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சித்தது தான் நான் செய்த குற்றம். மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களும் பேதம் தெரியாத அரசியல் உலகில், இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.
என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்பட அரசியல் களத்தில் இருந்து முற்றாக விலகி நிற்பதே விவேகமானது. எந்த கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ‘நான் போகிறேன் வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…