நானும் சிஎஸ்கே ஆதரவாளன்! ஆனா தமிழன் இல்லாதது வேதனை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக கிடைக்கவில்லையா?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி 2.0 விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நானும் கிரிக்கெட் பார்ப்பேன், எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும், அதுவும் நானும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளன் தான்.

எனக்கும் தோனியை பிடிக்கும், தோனிக்கு விசில் போடு என்று கூறி மேடையில் விசில் அடித்தார். ஆனால், அந்த அணியில் ஒரு தமிழன் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான் என தெரிவித்தார். 20 வீரர்கள் இருக்கிறார்கள், அதில் ஒரு தமிழனாவது இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எல்லாரும் ஆதரவு தருகிறோம், பேரிலேயே சென்னையை வைத்துக்கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம், வேதனையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக உங்களுக்கு கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையை சார்ந்தவர்கள் கூட சென்னை அணியில் உள்ளனர், ஆனால் தமிழர்கள் இல்லாததுதான் எனக்கு வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

47 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago