நான் கொரோனா வைரஸ்! நான் உங்கள் நடுவில் வந்து உட்கார்ந்தா எப்பிடி இருக்கும்!

Default Image

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து, இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் யாரும் வெளியே தேவையில்லாமல் சுற்ற வேண்டாம் என கூறப்பட்ட நிலையில், பலரும் இதை கேட்காமல் சுற்றி வருகின்றனர். 

இதனையடுத்து, சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகிறார். இவர், வாகன ஓட்டிகளிடம், ‘நான் கொரோனா வைரஸ் தானே, நான் உங்கள் நடுவில் வந்து உட்கார்ந்தாள் எப்படி இருக்கும்.’ என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்