தனது மனைவியை 'கும்பகோணம் to புதுச்சேரி' சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணம் டு புதுச்சேரி சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.

கும்பகோணத்தை சேர்ந்த 65 வயதுடைய அறிவழகனின் மனைவி 60 வயதுடைய மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியை சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து செல்ல அறிவழகன் முடிவெடுத்தார். எனவே தனது மனைவியை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுமார் 150 கி.மீட்டர் இரவு முழுவதும் பயணம் செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த தகவலை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் 2 நாட்கள் அவர்களை அங்கே தங்க வைத்து அவரது மனைவி மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் தங்களின் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு மனைவியை மீண்டும் சைக்கிளில் அழைத்து செல்ல தயாரான அறிவழகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. புதுச்சேரி மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சைக்கிளோடு சேர்த்து அவர்களையும் ஏற்றி கும்பகோணத்திற்கு இலவசமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிவழகன் கூறுகையில், தனது மனைவிதான் எனக்கு எல்லாமே என்றும் அவள் இல்லாமல் நான் இல்லை என்று கூறியது மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago