திருவாரூரில் போதையால் மனைவியை கொலை செய்த கணவர், பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் கிராமத்தை சேர்ந்த 60 வயதான பால்சாமி என்பவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வருவது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மதுபோதையில் அவரது மனைவி மாரியம்மாளிடம் சென்ற பால்சாமி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதன்பின்பு ஆத்திரமடைந்த பால்சாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் கழுத்து, தாடை ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவி உயிரிழந்து விட்டதை அறிந்த பால்சாமி தனது வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, மது போதையில் இருந்ததால் சத்தமாக உளறியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அவர் விஷம் அருந்தியது தெரிந்ததால் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முதிர்ந்த வயதிலும் மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரால், அந்த கிராமம் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…