போதையால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவர்!

Default Image

திருவாரூரில் போதையால் மனைவியை கொலை செய்த கணவர், பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் கிராமத்தை சேர்ந்த 60 வயதான பால்சாமி என்பவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வருவது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மதுபோதையில் அவரது மனைவி மாரியம்மாளிடம் சென்ற பால்சாமி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதன்பின்பு ஆத்திரமடைந்த பால்சாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் கழுத்து, தாடை  ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த  மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவி உயிரிழந்து விட்டதை அறிந்த பால்சாமி தனது வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, மது போதையில் இருந்ததால் சத்தமாக உளறியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அவர் விஷம் அருந்தியது தெரிந்ததால் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முதிர்ந்த வயதிலும் மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரால், அந்த கிராமம் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்