போதையில் வந்த வாகனம் மோதியதால் உயிரிழந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூடக்கோரி கணவர் போராட்டம் செய்தார்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஜம்புகண்டி என்னும் இடத்தில அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை ஓன்று இருந்து வருகிறது. இந்த கடையை மூடக்கோரி பலரும் கோரிக்கை வைத்த நிலையில் அரசு செவி சாய்க்கவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், நேற்று அங்கு குடித்துவிட்டு போதையில் வந்த இருவர் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்த ஷோபனா என்பவரது வாகனம் மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஷோபனா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது மகள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த ஷோபனாவின் கணவர் மருத்துவர் ரமேஷ் விபத்திற்கு காரணமான மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மனைவியின் சடலத்துடன் சாலையில் நடுவே அமர்ந்து போராடாத் துவங்கினர். ரமேஷ் அவரது செயலுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் தீயாய் பரவ உடனடியாக அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரமேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை உடனடியாக மூடுவதாகவும், விபத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கூறினர் இத ஏற்று ரமேஷ் மற்றும் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கை விட்டனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…