3 வருடத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை.! 1 லட்சம் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்.!

Published by
murugan
  • ரமேஷ் , சரண்யா இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
  • மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் ரமேஷ் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம்  ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்ற என்பவருடன் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சரண்யா வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சரண்யா பெற்றோர்கள் மதுரை மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் சரண்யா கணவர் ரமேஷ் கொடுத்த தகவலின் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம்  ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்யுமாறு கூறியதை அவர் ஒப்புக்கொண்டார். சரண்யாவை கொலைசெய்து  சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னர் ரமேஷ் தகவல் கொடுத்த இடத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் ஜேசிபி மூலம் சுமார் 3 மணி நேரம் தோண்டிய  பின்னர் சரண்யாவின் எலும்புக்கூட்டை எடுத்தனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் சரண்யாவின் எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும் கணவர் ரமேஷ் பாட்ஷா மற்றும் ரகு  ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மனைவியை கணவரே ஆள் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
murugan

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

19 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

22 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

53 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago