யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது..!

யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரத்தில், கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.
இந்நிலையில்,கடந்த 18 ஆம் தேதி அப்பெண்ணுக்கு பிரசவ வலி திடீர் என்று ஏற்பட்ட நிலையில்,லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும், அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமானதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025