மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்து இறுக்கி கொலை செய்த கணவர் கைது.!

Published by
பால முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி முருகவள்ளி, சண்முகம் கட்டிட தொழிலாளி, இவர்கள் இருவருக்கும் தமிழ்செல்வன் ரபிஷியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் சண்முகம் மற்றும் முருகவள்ளி ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சமதமில்லாமல் திருமணம் செய்தனர்.

மேலும் திருமணம் முடிந்த பிறகு தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர்உசேன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார், மேலும் முருகவள்ளி அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை வைத்து கணவன் சண்முகம் நடத்தையில் சந்தேகபட்டு திட்டியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வெளிய முருகவள்ளி வரவில்லை மேலும் இதனால் சந்தேகம் அடைந்த அங்குள்ள அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முருகவள்ளி நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்நிலையில் மேலும் இந்த சம்பவம் நடந்ததை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சண்முகம் தனது மனைவியை கையிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார், இதையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago