வடிபட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யனகவுண்டன்பட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் தான் அருண்குமார். இவரது மனைவி ஜெயபிரதா, இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி ஜெயபிரதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அருண்குமார் வழக்கமாக சண்டையிட்டு வந்த நிலையில், நேற்று இவர்கள் இருவருக்கும் இடையே வரதட்சணை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அருண்குமார் ஆத்திரத்தில் சூடான பாலை தனது மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் அருண்குமார் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த ஜெயபிரதா வாடிப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…