மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில நீடிப்பதால், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில நீடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சூறாவளிக்காற்று மணிக்கு 40-5 0 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் குமரிக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், கேரளா கடலோர பகுதி, லட்ச தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய கடலோர பகுதிகளுக்கு அடுத்த 2 தினங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…