சேலம் மாவட்டம் வீமனூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிரார். கடன்தொல்லை காரணமாக இந்த பெண்ணின் கணவர் செல்வம் ஏற்கனவே தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் அவர் வாங்கிய கந்து வட்டி கடனை திருப்பி கேட்டு கந்துவட்டி கடன் கொடுத்தவர்கள் அந்த பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்தனர். பணமும் வருமாணமும் இல்லாமல் வறுமையில் வாடிய அந்த பெண் தனது 3 குழந்தைகளின் பசியை போக்க வழியின்றி தவித்தார். இதனால் அவர் தனது தலையை மொட்டையடித்து அந்த முடியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தனது மற்றும் குழந்தைகளின் பசியை போக்கினார். இதனை கண்ட ஒருவர் இந்த செய்தியை முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதனால் இந்த செய்தி ஊடகங்களிலும் தீயாய் பரவி தமுழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், தமிழக அரசின் சமூகநலத்துறை, ஊட்டச்சத்து துறை செயலாளர் மதுமதிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், `‘தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய பெண்ணின் பிரச்னையை குறைக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த விவரங்களை விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது சிறந்த நிகழ்வாக சமுக வலைதள வாசிகள் கருதுகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…