7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரியின் அதிரடி பேச்சு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும், பொதுமக்களும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும், சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறது.
இதனால், தமிழக கவர்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றும், ஆளுநர் தாமதிக்கும் பட்சத்தில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர், அமைச்சர்கள் கொண்ட குழுவை கூட்டி, ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும், இவர்கள் உரிய தண்டனை காலத்தை விட அதிகமாக தண்டனை பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனியும் ஆளுநர் தாமதித்தால், ‘கெட்டவுட் கவர்னர்’ என்ற முழக்கத்தோடு, தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும், ஒன்று சேரக் கூடிய சூழல் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில், தமிழக அரசு 7 பேரையும், ஒரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய கட்சியின் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…