ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலின் போது வாக்களித்து விட்டு வந்த போது நிறை மாத கர்ப்பிணி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களாளே பிரசவமும் பார்க்கப்பட்டது. இதில் குழந்தை இறந்து பிறந்தது. இதன் பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயையும், சேயையும் காப்பற்ற முடியவில்லை என அந்தப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர் .
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இது தொடர்பான பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், மருத்துவர்கள் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வார காலத்திற்க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கடமையை சரியாக செய்யாத ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…