வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.?

Published by
மணிகண்டன்

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6000 ரூபாய் நிவாரண தொகை பெறலாம் எனவும் அதற்கான வழிமுறைகளும் வெளியாகியுள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முழுவதும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெரும்பாலான கடலோர பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தோர் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இன்னும் புறநகரில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் நிவாரண தொகையை அறிவித்தார். சென்னை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கும் ரூ.6000 நிவாரண தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறிப்பாக புறநகர் பகுதியில் அதிகம் இருப்பது வெளிமாவட்டத்தை சேர்ந்த மக்கள். அவர்கள் ரேஷன் கார்டு முகவரி வெளியூரில் இருக்கும். அவர்கள் இங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வருவர்.

இதனை குறிப்பிட்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6000 ரூபாய் நிவாரண தொகை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

  • தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண தொகை விண்ணப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அந்த விண்ணப்பத்தில் பெயர், தற்போதுள்ள முகவரி , ரேஷன் கடை எண் ஆகியவை நிரப்ப வேண்டும்
  • நிரப்பிய விண்ணப்பத்தை ரேஷன் கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் பிறகு அரசு அதிகாரிகள் தற்போது தங்கியுள்ள வீட்டிற்கு வந்து நேரில் ஆய்வு செய்வர்.
  • ஆய்வுக்கு பின்னர் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ தகவல் வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

33 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

34 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

1 hour ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago