திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக என்று சொல்லவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வாசித்தார். அதில், 2021-22-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மார்ச் வரை ரூ.2,200 கோடி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நிர்வாக குறைபாடுகளால் தான் மின் வெட்டு நிலவி வருவதாகவும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு, 2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும் என சொல்லவில்லை என்றும் போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…