ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக மே 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதனிடையே நேற்று தமிழகத்தில்  639 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  நேற்று 482 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்த 6,750 பேரில் 1,498 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 5,167 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோடம்பாக்கத்தில் 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago