ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Default Image

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக மே 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதனிடையே நேற்று தமிழகத்தில்  639 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  நேற்று 482 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்த 6,750 பேரில் 1,498 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 5,167 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோடம்பாக்கத்தில் 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்