தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1075 ஆக உள்ளது. ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை 199, கோயம்பத்தூர் 119, ஈரோடு 64, திருப்பூர் 60, திண்டுக்கல், திருநெல்வேலி தலா 56, நாமக்கல் 45, செங்கல்பட்டு, திருச்சி தலா 43, தேனி 41, ராணிப்பேட் 39, திருவள்ளூர் 29, கரூர், மதுரை தலா 25, நாகை, தூத்துக்குடி தலா 24, விழுப்புரம் 23, கடலூர் 19, சேலம் 17, திருப்பத்தூர் 16, கன்னியாகுமரி 15, திருவாரூர் 13, வேலூர் 12, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் தலா 11, நீலகிரி 9, காஞ்சிபுரம் 8, சிவகங்கை 6, தென்காசி 5, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் 1, பெரம்பலூர் 1 என தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 23 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் அரசு மருத்துவமனையில் 14 மற்றும் தனியார் மருத்துவமனையில் 9 என மொத்தம் 23 பரிசோதனை மையங்கள் இருக்கின்றது என பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…