திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், இந்த 4 மாதங்களில் திமுக அரசு, அதிமுக கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெயிடு பண்ணுவது இதைத்தான் அவர்களுடைய பணியாக இருக்கிறது. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவர்களுடைய ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். நான் நினைத்திருந்தால் திமுக மீது எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…