மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் திமுகவிற்கு தான் பொருந்தும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் வேளச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பட்டியலில் அழகுமுத்துக்கோன் பெயர் இடம்பெறாதது யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திமுக அமைச்சரவையில் உள்ள யாதவ சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் பெரியகருப்பன் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரடைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் கருத்து. மத்திய அரசு உயர்த்தி கொடுத்த அகவிலைப்படியை, மாநில அரசு உயர்த்தி தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று பேசமாட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் திமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கையில் நிதி அதிகரிப்பது இயல்பானது தான். வேளாண் தனி நிதிஅறிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் கூட்டுப்பண்ணை போன்றவை நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…