கொரோனா பரவும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ராஜபாளையம், மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் 5 விநாயகர் சிலைகள் வைத்து, 50 பேர் மட்டும் பங்கேற்புடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா பாதித்து வரும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்? என கேள்வியெழுப்பினார்.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்பபெறவிட்டால், அதிக அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யநேரிடும் என நீதிபதி வலியுறுத்தினார்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…