‘காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது’ – ஊர் மக்களுடன் இணைந்து நடனமாடிய அமைச்சர் சக்கரபாணி…!

Default Image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார்.

கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர். இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எவ்வளவு தூரம் சென்றாலும், நமது வேர்களை மட்டும் மனம் நினைக்க மறக்காது. எனது உறவுகளான ஊர் மக்களுடன் இணைந்து நடனம் ஆடியது, என்னை என் இளமைக்கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. மக்கள் பணியில் ஆழ்ந்திருக்கையில், காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது என்பதே தெரிவதில்லை.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்