தட்டாஞ்சாவடி தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும் என திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12-ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ தனது பதவியை விலகி உள்ளார்.
எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், எம்.எல்.ஏ பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து திமுகவில் இருப்பேன். தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும். புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…