மருத்துவர்களையே காக்க இயலாத அரசு மக்களை எப்படி காக்கும்? ஸ்டாலின்

Default Image

மருத்துவர்களையே காக்க இயலாத அரசு மக்களை எப்படி காக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சிமருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் போராடியிருக்கிறார்கள். மருத்துவர்களையே காக்க இயலாத அரசு மக்களை எப்படி காக்கும்? தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்