வீட்டு வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளித்த விவகாரம். புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்யபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை கொடுத்து வசித்து வந்துள்ளார். பெயிண்டராக வேலைபார்த்துவந்த சீனிவாசனுக்கு கொரோனா ஊரடங்கினால் சரிவர வேலை இல்லாததால், வாடகை கொடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாம் சீனிவாசனை விசாரித்துள்ளார். அப்போது சீனிவாசனை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்க முடியாத சீனிவாசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனை அடுத்து உடலில் 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இறப்பதற்கு முன்னர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…