கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா தொற்றுக்கு ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோஹாமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டறிவதில் ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன்படி, அந்த மருந்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிறில் சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்னர் இதே முறையில் மீண்டும் மருந்து சாப்பிட வேண்டும் என தெரிவித்தது. கேரளா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்று பின்பற்றி வருவதாகவும், தமிழகமும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. அதனை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago