மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிற நிலையில், 4 செவிலியர்கள் கொண்ட 5 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இத்திட்டமானது, முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த இயலாதவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் 1,000 பெரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…