மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிற நிலையில், 4 செவிலியர்கள் கொண்ட 5 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இத்திட்டமானது, முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த இயலாதவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் 1,000 பெரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…