திருச்சி:இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த 8 குழுக்களில்,சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில்,தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், சர்மிளா சங்கர் என்பவரது தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி-சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிகொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் வீடியோ காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து,கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால்,இல்லம் தேடி கல்வி பிரச்சார குழுவிலிருந்து சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பணிக் குழுவை நீக்கம் செய்து திருச்சி ஒருங்கிணைந்த பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…