தனியார் நிதிநிறுவன கடனுக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டதால், விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள தேவதானம்பட்டியை சேர்ந்த காமக்காபட்டி சேர்ந்த 62 வயதுடைய அர்ஜுனன் எனும் விவசாயி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்த 15 லட்சத்தை பல்வேறு தவணையில் இவர் செலுத்தியுள்ளார். இருப்பினும் மூன்று தவணை தொகையை அவரால் சில பொருளாதார சிக்கல் காரணமாக செலுத்த முடியாமல் சென்றுள்ளது. பின்பு மீண்டும் தவணை தொகையை செலுத்துவதற்கு சென்றபொழுது, மொத்தமாக அந்த தொகையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனத்தில் கூறியுள்ளனர். இதனால் வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை செலுத்த கூறியதால் அவர் பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.
அவ்வாறு வட்டியுடன் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அர்ஜுனன் வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும் வீடு நிறுவனத்தினால் ஜப்தி செய்யப் பட்டுள்ளது. வீடு ஜப்தியாவதை தடுக்க முடியாத அவர் விஷம் அருந்தி விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். தாலுகா அலுவலகங்களில் வைத்து குறைதீர்க்கும் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலுவலகம் முன்பாக வந்து நின்று ஒருவர் திடீரென மயங்கி விழுவதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி இருந்ததால், மருத்துவமனை சென்று விசாரித்தபோது மருத்துவர்கள் அவர் விஷ மருந்து அருந்தி இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் அவர் விஷம் அருந்தி விட்டு சில ஆதாரங்களை கையில் வைத்தபடி வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அர்ஜூனனின் மனைவி மற்றும் மகன்கள் தற்போது அவரது உடலை வாங்கியுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…