கொரோனா சிகிச்சை பெறுபவர்களை வீட்டிலேயே பராமரிக்கும் திட்டம் ! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.

Default Image

கொரோனா சிகிச்சை பெறுபவர்களை வீட்டிலேயே பராமரிக்கும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று  தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.அதாவது,அம்மா கோவிட் -19 என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின்  நோக்கம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும்.இதற்காக 20 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் நபர்களுக்கு 14 முகக்கவசங்கள், வெப்பமானி,பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி,கிருமி நாசினி,வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் ரூ.2500 செலுத்தி பயன்பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்  வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் முறையாக  திட்டம் தொடங்குவது தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk