வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,இது புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அலெர்ட் :
இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை :
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில்,தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…