வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை – சபாநாயகர் அப்பாவு

Default Image

வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாகவும் சபாநாயகர்  அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைய  உள்ளது.

இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன்படி, 8-ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சட்டப்பேரவை நடைபெறும் என்றும், விநாயகர்  மறுநாளான 11-ஆம் தேதி சனிக்கிழமை பேரவை அலுவல் கிடையாது என்றும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாகவும் சபாநாயகர்  அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்