தமிழகம் முழுவதும் இந்த பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை..!

Default Image

இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

அதேபோல் கடந்த 19-ஆம் தேதியும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், நேற்றும் தமிழகம் முழுவதும் 3-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 15 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்