சிக்காத சிறுத்தை… அச்சத்தில் பொதுமக்கள்! 9 பள்ளிகளுக்கு லீவு..

Published by
பாலா கலியமூர்த்தி

Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில்,  பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிறுத்தையை பிடிக்க காவல்துறையும், வனத்துறையும் வலைவீசி தேடி வருவதாக கூறப்பட்ட நிலையில், செம்மங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையும், காவல்துறையும் ஈடுபட்டு வரும், சிறுத்தை இன்னும் சிக்கவில்லை.

சிறுத்தை செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவை கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கி இருக்கலாம் என்றும் அல்லது வேறொரு இடத்திற்கு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது, சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் மற்றும் வலைகள் வைக்கப்பட்டுள்ளது.

வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர் என்றார். எனவே, சிறுத்தை இன்னும் சிக்காததால் மயிலாதுறை பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

6 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

7 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

8 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

9 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

9 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

10 hours ago