தீர்ப்பு வரும் வரை ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலம் யாருக்கும் சொந்தமில்லை!

Default Image

ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கும் தீர்ப்பு வரும்வரை நிலம் சொந்தம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 333.30 ஏக்கர் காப்புக்காடு பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பணிகள் நடந்த பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அந்த நிலத்தை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில் தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினருக்கும் அந்த நிலம் சொந்தம் கிடையாது என கூறியுள்ளார். மேலும் அங்கு பணிகளுக்கு தடை விதிக்கவில்லை ஆனால் உரிமை கொண்டாடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்