பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு – தமிழக அரசு உத்தரவு.!

Default Image

தமிழகத்தில் இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் ஆளுநர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனவால் அமல்படுத்தப்பட ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்தது தமிழக அரசு. இதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து தொழில்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் உயர்மட்டக்குழு கருத்துக்களை கேட்டறிந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அரசிடம் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்மட்டக்குழுக்கு தமிழக உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings