உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி கிடைத்த அங்கீகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம் என்றும் நாட்டுக்கே வழிகாட்டும் சமூக கடமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்யும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அவசர அவசரமாக ஒதுக்கீடு அறிவித்தனர். வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தானது பற்றி முதலமைச்சர் விளக்கமளித்தார். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago