திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்கப்படுவதாக கூறி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அதனை புகைப்படம் ஆதாரத்துடன் தொகுதி தேர்தல் அதிகரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்து, கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளது. மேலும் ஆவணங்களை ஆணையத்திடம் வழங்கி மனுதாரர் நிவாரணம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…