மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகள் வாங்க தடை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும்,  இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுவதகவும், மோசமான சாலைகளை முழுமையாக மேம்படுத்திய உடன் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டப்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படியும் மற்ற பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என  விளக்கமளித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் ஒரு பேருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கு ரூ.58 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டும் தற்போது கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் வாதமாக முன்வைத்த பிறகு,  இந்திய ஆட்சியாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்களா? என்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகள் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ஆணைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் வாங்க வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் மாற்றுத்திறனிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

34 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

2 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

4 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago