காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா இசையில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய மூன்று இசை நிறுவனங்கள் பயன்படுத்த தனி நீதிபதி கொண்ட அமர்வு முன்னதாக அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…