பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
மதுரையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை, பீ.பீ.குளம், நேதாஜி மெயின்ரோடு பகுதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
மின் இணைப்பு, ஆதார் மற்றும் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது. எங்களுக்கு வேறு இடம் இல்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலிகள். வெளியேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான அமர்வு, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் குடியிருக்கக் குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் அளிக்க வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருப்போர் நான்கு மாதத்தில் காலி செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் அளிக்காதவர்களின் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை குறிப்பிட்டுள்ளது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…