Madurai High Court - Vinayagar Chathurthi [FIle Image]
வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு விநாயகர் சிலை வைத்து வழிப்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கைகள் எழுகின்றன. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சிலை வைத்து வழிபட கோருவோர் முன்னதாக காவல்துறை அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் செப்டம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரையில் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு, அதனை தாமிரபரணியில் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, விநாயகர் சிலை ஊரவலம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்காகி செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்பளித்துள்ளனர் .
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…