தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை விரைவாக செய்து முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை (சுகாதாரத்துறை) செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகபட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…