Chennai HIgh Court [Image source : Wikipedia]
நீண்ட நாட்களாக குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை .
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்த 49 பேரில் 5 பேர் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறும், தங்களது மனு மீது ஆளுநர் முடிவெடுக்கும் வரை இடைக்கால ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் இந்த 5 கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த நிலையில், தமிழக அரசின் கருத்தை ஏற்று 5 கைதிகளுக்கும் இடைக்கால ஜீமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவையுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…