சமூக வலைத்தளங்களில் சர்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கல்யாணராமனை கைது செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கல்யாணராமன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கல்யாணராமனின் மனுவை விசாரித்தபோது அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? என்று நீதிபதி கேட்டனர். மேலும், கல்யாணராமன் நீதிமன்றம், சட்டம் மற்றும் போலீசாரை மதிக்கமாட்டாரா..? என கேள்வி எழுப்பி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கல்யாணராமன் மனு மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், கல்யாணராமன் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…